மதுரையில் சாலையோர உணவகத்தில் ஆம்லெட் சரியாக வேகவில்லை என தகராறில் ஈடுபட்டவர், அங்குள்ள தொழிலாளியைக் கத்தியால் குத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயா என்ற உதயகுமார் என்ற தொட்டி ஜெயா (24). இவர், மேலவெளி வீதியில் சாலையோரக் கடையில் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு, புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்ட அவர், ஆம்லெட் சரியாக வேகவில்லை எனத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடையில் உணவு பரிமாறும் தொழிலாளி திருப்பதியை (30), உதயகுமார் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த திருப்பதி, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக, திடீர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து உதயகுமாரைக் கைது செய்தனர்
0 comments:
Post a Comment