தமிழகத்தில்
முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருச்சி நாடாளுமன்ற தொகுதி இளைஞர்
காங்கிரஸ் சார்பில் திருச்சி ஜங்ஷன் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தனியார்
பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளை விரைந்து
நிறைவேற்ற வேண்டும். திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் விச்சு, ஜி.எம்.ஜி. மகேந்திரன், பூபாலன், கிருஷ்ணகுமார், பிரேம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment