Home » , » தமிழ் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய கேரள நடிகை

தமிழ் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய கேரள நடிகை

Written By Unknown on Friday 21 June 2013 | 06:07

தலைவா படத்துக்காக முதன் முதலில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார் அமலாபால். வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
தொடர்நது சிந்து சமவெளி படத்தில் நடித்தாலும் மைனா படம் இவருக்கு திருமுனையை ஏற்படுத்தியது. தற்போது நிமிர்ந்து நில், தலைவா போன்ற படங்களில் நடித்து வரும் அமலாபால் விரைவில் சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க இருக்கிறார். தலைவா அமலாபால் நடிக்கும் பத்தாவது படம். இதுவரை தான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசாத இவர் தலைவா படத்துக்காக முதன்முறையாக டப்பிங் பேசியுள்ளார்.
வேட்டை படத்தில் நடித்த போது அதில் டப்பிங் பேசும்படி லிங்குசாமி எவ்வளவோ சொல்லியும் அமலாபால் டப்பிங் பேசவில்லையாம். ஆனால் தலைவா படத்துக்காக நன்கு தமிழ் கற்று அதன்பிறகே டப்பிங் பேசியிருக்கிறார். காரணம் என்னவென்றால் படத்தில் அமலாபாலுக்கு போட்டியாக நடித்துள்ள நடிகை ராகினி சொந்த குரலில் டப்பிங் பேச இருப்பதாக யாரோ கிளப்பி விட்டிருக்கின்றனர்.
அதனால்தான் நானும் சொந்தக்குரலில் பேசுவேன் என அடம்பிடித்து டப்பிங் பேசியிருக்காங்க அமலாபால். இதன்மூலம் அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது

0 comments:

Post a Comment