பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத 10 நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகளை, விவேகானந்தா கல்லூரி நடத்த உள்ளது.
திருவேடகத்தில் உள்ள இக்கல்லூரி வளாகக்தில் வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில், இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ளலாம்.
ஜூன் 3, 4, 5 ஆகிய நாள்களில் கல்லூரியிலேயே ஆன்-லைன் மூலம் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் தங்கி பயிற்சி பெறவேண்டும். மேலும், இதற்காக பாடப் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருள்கள், உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
இதற்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. உணவு, தங்குமிடம் இலவசம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04543-260257, 97155-62621, 96599-98382, 85264-64499.
0 comments:
Post a Comment