வழக்கு விசாரணைக்காக திமுகவைச் சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம்
தென்னரசு மற்றும் தமிழரசி. இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்
சேர்த்துள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மதுரை லஞ்ச
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விசாரணைக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி, தங்கம் தென்னரசு, அவரது மனைவி, தமிழரசி, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். விசாரணையை ஜூலை 24-க்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment